பொதுவாக தமிழ்ச்சினிமாவில் முன்னணி ஹீரோ யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அந்த ஹீரோவின் அபிமான இயக்குநராக இருப்பார். ஹீரோவின் மனசுக்குள் இருக்கிற ஹீரோயின் யார் என்பது அந்த இயக்குநருக்குத் தெரியும். யார் யார் படத்தில் இருக்க வேண்டும் என்பதை அந்த ஹீரோதான் முடிவு செய்கிறார் என்றாலும் “எல்லாமே டைரக்டர் ஜாய்ஸ் “என்பது போல ஒரு மாயை உருவாகி இருக்கும். டைரக்டரும் வெளியில் அப்படித்தான் கெத்தாக சொல்லிக் கொள்வார்.அவரது ஜீவனம் ஓடியாகணுமே! ஆனால் முன்னணி இயக்குநர்கள் சுயமாகத்தான் செயல்படுகிறார்கள்.
தங்களின் பட வசனங்கள் ,பாடல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூட அந்த ஹீரோக்களே முடிவு செய்கிறார்கள்.ஆனால் பொறுப்பு இயக்குநரின் தலையில் என்பதாக வெளியில் சொல்லப்படுகிறது. ஹீரோக்களின் பிடியில் தமிழ்ச் சினிமா சிக்கி இருக்கிறது என்பதுதான் உண்மை.
இத்தகைய நிலையில்தான் இயக்குநர் சுந்தர்.சி.சில கருத்துக்களை வெளிப்படுத்தி இருப்பதாக இணைய தளங்களில் வந்த செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
’ சில இயக்குநர்கள் பெரிய ஹீரோ படங்களை இயக்கும்போது ஹீரோக்களை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையை தயாரிப்பாளரின் தயாரிப்பு செலவில் காட்டுவதில்லை , ஹீரோவை உற்சாகப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். இதனால் அளவுக்கு அதிகமான பட்ஜெட்டில் படத்தின் தயாரிப்பு செலவு செல்வதாகவும், இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை அடைகின்றனர். ஹீரோ கைகாட்டுபவர்தான் இயக்குநர் என்பதால் அந்த ஹீரோவை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்க இயக்குநர்கள் சாதாரண பட்ஜெட்டில் முடியவேண்டிய படத்தை பிரமாண்டம் என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படமாக மாற்றிவிடுகின்றனர்’ என இளையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த கருத்துக்கு தயாரிப்பாளர்களின் ஆதரவு இருக்கிறது.