எங்கே ஓட்டை இருக்கிறதோ ,அங்கே வாலை நுழைக்கப் பார்க்கிறார்கள்.
ஆரம்பமாகி விட்டதடி அரூபத்தின் வேலைகள் என்பதை போல இந்தி மொழி வெறியர்கள் தங்களின் சுயத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
கோவாவில் நடந்துவரும் சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பு அழைப்பாளராக நடிகை டாப்ஸி கலந்து கொண்டு பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லிவந்தார்.
அப்போது ஒரு ஆள் “நீங்கள் பாலிவுட் நடிகை .அதனால் இந்தியில்தான் பதில் சொல்ல வேண்டும்” என வற்புறுத்தினார்.
அதற்கு விட்டார் பாருங்கள் ஒரு பதிலை ! மூச்சடைத்துப் போனார் அந்த மொழி மொழி வெறியர்.
“நான் பாலிவுட் நடிகை இல்லை.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்கிறேன்.அந்த மொழிகளின் படங்களில் இருந்துதான் நடிப்பைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்”என்பதுடன் நில்லாமல் கூட்டத்தினரைப் பார்த்து “எல்லோருக்கும் இந்தி தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார்.
“தெரியாது!” என்பதுதான் பதில்.
அதன்பிறகு அந்த இந்திவெறியர் அமைதியாகிவிட்டார்.
எப்படியெல்லாம் இருக்காய்ங்க !