வல்லமை வாய்ந்த பேரரசு இந்தியா என மார் தட்டிக் கொள்கிறோம்.
ஆனால் பெரிய பெரிய குற்றவாளிகள் எல்லாம் நாட்டை விட்டு சுலபமாக தப்பித்து வெளிநாடுகளில் போய் பதுங்கி விடுகிறார்கள்.அவர்களை கொண்டுவர முடியவில்லை என்பதை நம்பத்தான் முடியவில்லை. அவர்கள் எல்லோருமே ஆளும் கட் சிக்கு விசுவாசிகளாக இருப்பார்களோ என்னவோ…இருக்கிற இடத்தில் மகாராசனாக இருந்து கொள் என ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
சனாதன இந்து சாம்ராஜ்யம் ‘கைலாசா ‘ என்கிற எண்ணத்துடன் 30 சிஷ்யைகளுடன் கள்ள பாஸ்போர்ட்டுகளுடன் தப்பித்து ஓடிய நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பது இன்டர்போல் போலீசுக்கே தெரியவில்லையாம். குஜராத்தில் இருந்து யாருடைய உதவியுடன் அந்த பிராடு ஓடினார் என்பது தெரியவில்லை என்பது அரசுக்கு ஏற்பட்ட அவமானமாக தெரியவில்லையா? எத்தனை கோடிகளுடன் அந்த ஆள் போயிருக்கிறார்?பேரங்கள் எதுவும் நடந்தனவா?
தெரியவில்லை.
சரி அந்த சனியனை விட்டுத்தள்ளுவோம். அரசு ஆதரவு இல்லாமல் சென்றிருக்க முடியாது.
இதையெல்லாம் பார்த்த நம்மூர் கோலிவுட் ஆட்களுக்கு நித்தி மாதிரி ஆசை வந்து விட்டது போல.!
“நான் அவளை சந்தித்தபோது “என்கிற திரைப்படத்தின் இசை ,முன்னோட்ட விழாவில் கலந்து கொண்ட சாம்ஸ் என்கிற சிரிப்பு நடிகர் “டைரக்டர் பேரரசு கைலாசாவை பற்றிய சிந்தனையில் இருக்கிறார்” என்று நைசாக போட்டுக் கொடுத்தார்.
காமெடிக்காக சொன்னாரா, அல்லது கைவசம் படங்கள் இல்லாத பேரரசுக்கு அப்படியும் ஒரு ஆசை இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை சொன்னாரா?
ஆடியன்ஸ் குழம்புவர்களா மாட்டார்களா?
பேரரசுவின் பேச்சு இப்படி இருந்தது.
“தனி கைலாசா நான் ஆரம்பிக்கப்போவதாக சொன்னார். அப்படியே 4,5 சிஷ்யைகளையும் சாம்ஸ் செட் பண்ணிக்க கொடுத்தால் நல்லா இருக்கும்.அந்த சிஷ்யைகளுக்கு கெட்ட வார்த்தைகள் பேசத் தெரிந்திருக்க வேண்டும்! சாம்ஸ் செட்டப் பண்ண வேண்டும்” என்று அந்த காமடி நடிகருக்கு ‘புது வேலை ‘யையும் கொடுத்தார்.
அடுத்துப் பேசியது அவரது ஒப்புதல் வாக்குமூலமாகவே இருந்தது.
“இளைஞர்கள் கெட்டுப் போவதற்கு சினிமாவும் ஒரு காரணமாக இருக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆறு மாதம் வாழ்ந்து விட்டு பிறகு கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்கிற மாதிரியான படங்கள் வருகின்றன.சமூக சீரழிவுக்கு இத்தகைய படங்களும் காரணம்தான்!
ஆராயாமல் ஒருவனை நம்பி தானாகவே விரும்பி கெட்டுப் போகிற பெண்களும் இருக்கிறார்கள்.இத்தகைய பெண்களை பற்றித்தான் பாக்யராஜ் பேசி இருந்தார்.
அடுத்து பாலியல் வன்முறைக்கு பலியாகிற பெண்கள்.
பாக்யராஜ் மீது பெண்களுக்கு தனி மரியாதை இருக்கிறது.அந்த 7 நாட்கள் படத்தின் வழியாக பெண்களின் மத்தியில் கவுரவமான இடத்தை பெற்றிருக்கிறவர் பாக்யராஜ்.அவர் மீது குற்றம் சாட்டுவதற்கு ஆந்திர தேசத்துப் பெண்களுக்கு என்ன அவசியம்? இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவே சந்தேகப்படுகிறேன். கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்” என்பதாக பேரரசு பேசினார்.