நீலம் புரடக்சன்ஸ் படம் என்றால் அதில் கட்டாயம் கருத்துகள் இருக்கும். சமுதாயம் சார்ந்த சிந்தனைகள் இருக்கும்,குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படமாக இருக்கும் என்கிற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.
வெறும் பசப்பு வார்த்தைகளாக இல்லாமல் பண்பாடு காக்கும் வசனங்களை பா. ரஞ்சித் படங்களில் எதிர்பார்க்கலாம். புதியவர்களை அறிமுகம் செய்கிற பாங்கும் படங்களும் கோடம்பாக்கத்து அறிவாளிகளுக்கு வழிகாட்டி…
ஒப்பனை செய்யாத ஒழுக்கத்துக்கு கோலிவுட்டில் பற்றாக்குறை.
அக்குறை நீக்கும் அக்கறையில் இதோ ஐந்து படங்கள் என அறிவித்திருக்கிறது நீலம் புரொடக்சன்ஸ்.
மாரி செல்வராஜ், அகிரன் மோசஸ் ,பிராங்க் ஜேக்கப் ,சுரேஷ் மாரி ,லெனின் பாரதி ஆகிய ஐந்து இயக்குநர்கள் நீலம் தயாரிப்பு நிறுவனத்துக்காக தங்களின் அற்புத படைப்புகளை தரப்போகிறார்கள்.