வம்புகள் ,வதந்திகள் ,ஏச்சுப்பேச்சு ,ஏகடியம் என அடுத்தடுத்து வந்தாலும் அவையெல்லாம் முனை முறிந்து வீழ்ந்தன என்பதுதான் உண்மை.!
சிலம்பரசன் என்கிற அந்த சிறுவன் நடிக்கத் தொடங்கிய காலத்தில் சூப்பர் ஸ்டாரின் பட வசூலையும் முறியடித்து முன்னேறியவன்.
இன்று வளர்ந்து சிம்பு ,எஸ்.டி .ஆர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிற முன்னணி நடிகர்.
புலம் பெயர்ந்த தமிழர்களாக இங்கு வாழ்கிற ஈழத்தமிழ் மக்களின் ஆதரவை பெற்று இருக்கிற நடிகர். ரசிகர்களின் வலுவான ஆதரவை பெற்றுள்ள சிம்பு அண்மையில்தனது பிறந்த நாளை வெகு சிறப்புடன் கொண்டாடி இருக்கிறார்..
இயக்குநர் இமயம் பாரதிராஜா,நடிகர் .இயக்குநர் சேரன்,மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ,எஸ்.ஏ.சந்திரசேகர் ,இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் இந்த அப்துல் காலிக்கை வாழ்த்தியிருக்கிறார்கள். அப்துல் காலிக் என்பது மாநாடு படத்தில் சிம்புவின் கேரக்டர் பெயர்.