பாக்யராஜ் பேசுகிறார் என்றால் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. . தலைப்பு செய்திகளாகிவிடும்.! அந்த அளவுக்கு அவரிடம் விசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
சுயசரிதையை வால்யூம் வால்யூமாக எழுதலாம்.
கல்தா ,,
படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக வந்த அவர் சுவையான ஒரு நிகழ்வை நினைவு படுத்தினார்.
“ஒரு பெண்ணை சைட் அடித்தேன். வாசலில் அந்த பொண்ணு தயாராக இருக்கும். நான் சைக்கிளில் போய் நைசாக லெட்டரை கொடுத்து விடுவேன். இப்படி கொடுக்கல் வாங்கல் நடந்துக்கிட்டிருந்த ஒரு நாள் நான் லெட்டர் கொடுக்கிற சமயத்தில் அந்த பொண்ணுக்கு பின்னாடி அவ அண்ணன் வந்திட்டிருப்பது எனக்கு தெரிந்தது . லெட்டரை கொடுக்காமல் சைக்கிளை திருப்பிக்கொண்டு வந்து விட்டேன்.
அவ அண்ணனுக்கு நம்ம சமாச்சாரம் தெரிஞ்சிருக்குமோ …ஒரு பயம்.!
ஒரு நாள் எங்கண்ணன் என்னை கூப்பிட்டாப்ல. ரூமுக்குள்ள போனேன்.அங்க அந்த புள்ளையோட அண்ணனும் உக்காந்திருந்தான். சரி இன்னிக்கி நம்ம கதை குளோஸ்ன்னு நெனச்சிக்கிட்டேன்.
போயி சிகரெட்டு வாங்கிட்டு வான்னு என்னை அனுப்பின பிறகுதான் நிம்மதியா இருந்தது.நம்ம மேட்டரு அவ அண்ணனுக்கு தெரியலன்னு ஒரு சந்தோசம்.
ஆனா சிகரெட்டை கொடுத்திட்டு திரும்புறபோது எங்கண்ணன் என்னை பளார் பளார்னு ரெண்டு அறை விட்டார். “ஏண்டா பிரஸ்டிடியூட் இருக்கிற சந்திலேயே சைக்கிளில் சுத்துறியாமே”ன்னு கேட்டதும் எனக்கு இந்த அடி நம்ம சைட் அடிச்சதுக்கு இல்லேன்னு திருப்தியாச்சு.ஆனா இன்னொரு தகவலும் தெரிஞ்சிட்டம்னு நெனச்சுக்கிட்டேன்.” என்றார்.