புதியதலைமுறையின் வியப்புக் குறி நவரச நாயகன் கார்த்திக்.
மகனும் ஹீரோ ,அப்பனும் ஹீரோ.!
முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர்தான் நவரச நாயகன். இவர் சிறிது காலம் விலகியிருந்த தவறினால் பலர் புதிதாக உள்ளே வந்து விட்டார்கள்.வந்தவர்களும் நிலைத்து நிற்கவில்லை என்பது சோகம்தான்.
அது பழைய கதை .
இவருக்கென ஒரு கேரக்டரை உருவாக்கி “தீ இவன்” என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாக இருக்கிறது.
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம்தான் ‘தீ இவன்’.
டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். சந்தோசம்.!
கார்த்திக்குடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.பெரிய கூட்டம்தான். இயக்குநருக்கும் ஒரு ஆசை .அவரும் நடிக்கிறார் .!
படம் பற்றி இயக்குனர் டி. எம்.ஜெயமுருகன் என்ன சொல்கிறார்.
“நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.
அண்ணன் தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படம். இதில் அண்ணனாகவும் கதையின் நாயகனாகவும் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். அரசியல் பணிகளில் பிஸியாக இருக்கும் ( பயங்கரமான பொய் சொல்றாங்கப்பா!) . என் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும். “என்றார் இயக்குநர்
. இதன் படப்பிடிப்பு திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில், கீரனூர் கிராமத்தில் உள்ள செல்வநாயகி அம்மா கோவிலில் பிரமாண்டமான பூஜையுடன் துவங்கியது. ஒரே கட்டமாக பொள்ளாச்சி, திருப்பூர், ஊட்டி, கோவை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கப்போகிறது.