படப்பிடிப்பின் இடையே நடந்த கோர விபத்து. அதனால் கடுமையான மன உளைச்சல் ,ஒரு கோடியை அள்ளிக்கொடுத்தாலும் மனதின் காயம். இத்தகைய சூழலில்தான் மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கம்.
எப்படி ஃபீல் பண்ணுகிறார் அதன் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன்.
அவரது டிவிட்டர் பக்கத்தில் என்ன சொல்லியிருக்கிறார்?
“பல கேள்விகள்,சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை,முழு பலம்,என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான்.
வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியை சொல்லிலின்றி,தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்.” என்பதாக பதிவிட்டிருக்கிறார்.
இதற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் பதில் சொல்லி வருகிறார்கள்.
“எங்கள் ஒரே நம்பிக்கையும் நீங்கள் தான் நம்மவரே! துணிந்து செல்லுங்கள் உங்களுக்கான நேர்மையான பாதையில்! நாங்கள் இருக்கிறோம் !” என தெரிவித்திருக்கிறார்கள்.