‘பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என ஒரு சினிமா பாட்டு உண்டு. அது மனிதர்களுக்கும் பொருந்தும்.சினிமாக்காரர்களுக்கு ரொம்பவே பொருந்தும்.
‘எவன்டா இன்னிக்கி சிக்குவான் ‘என்கிற கோபம் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.
‘இன்னிக்கி எப்படியாவது நம்ம அனுபவங்களில் ஒன்றை அவுத்து விட்டுரணும்னு’என்று நினைப்பவர்களும் உண்டு.
“வாடி மாப்ள, இன்னிக்கி நீதான் தொட்டுக்க சட்னி ,சிக்கினடா ‘என்கிற வெறியுடன் அழைப்பவர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் ஒரு விழாவில் ஒன்று கூடினால் எப்படி இருக்கும்? மீடியாக்களுக்கு செம தீனி அன்னிக்குத்தான்.!
அப்படி ஒரு விழாதான் பரமபதம் விளையாட்டு படத்தின் புரமோஷன் விழா.
4 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்திற்கு பாக்யராஜ் ,டி .சிவா ,ராஜன் ஆகிய முப்பெரும் கிரியேட்டர்ஸ் வந்திருந்தார்கள்.
பாடலாசிரியர் தரண் பேசுகையில் “ஓ கலா “என்று எழுதிய பாடல் பதிவாகிய கதையைசொன்னார் .
அந்தப் பாடல் வெளிவந்த போது காதுகளில் ‘வேறு விதமாக’ கேட்டிருக்கிறது. அம்ரீஷ் இசை அமைத்தது என்றால் அதில் வில்லங்க தொனி வராமல் இருக்குமா?
” இப்பாடல் பதிவு முடிந்து கேட்டபோது, தரம்குறைந்த பாடல் என்ற பெயர் பெற்றுவிடும் என்று அதிர்ச்சியடைந்தேன். இயக்குநரிடமும், இசையமைப்பாளரிடமும் தெரிவித்தபோது, அவர்களும் அதைப்புரிந்து கொண்டு மறுமுறை படப்பிடிப்பு செய்தார்கள்” என்றார் தரண் .
இயக்குநர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, ” படத்தின் விளம்பரத்திற்கு ஏன் நடிகர், நடிகைகள் வரமால் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பெரிய நாயகர்கள் ரஜினிகாந்த், விஜய், கமல் ஹாசன் போன்றவர்களே அவர்கள் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு வரும்போது இவர்கள் ஏன் வராமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், உங்களைப் போன்றோர்களை வைத்து படம் எடுத்தால் தான் விளம்பரமாகும் என்று எடுக்கிறோம். இல்லையென்றால், புதுமுகங்களை வைத்தே எடுத்து
விடுவோமே” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “தமிழ் பண்பாட்டை குலைக்கும் வகையில் பாடல் இயற்றக் கூடாது” என்றார்.
இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, சென்சார் குழுவின் தடுமாற்றங்களை பற்றி சொன்னார்.
இப்படத்தின் தலைப்பு ‘பரமபதம் விளையாட்டு’ அருமையான தலைப்பு. இத்தனை காலம் அதை மற்றவர்கள் உபயோகப்படுத்தாமல் தவறவிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால், பரமபதம் என்ற வார்த்தை வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. அந்த தலைப்பை வைத்த இயக்குநர் திருஞானத்திற்கு பாராட்டுக்கள். டிரெய்லரைப் பார்க்கும்போது படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்திற்கு எதற்காக யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை.”என்றார்.