தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள்..
“இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினார்கள்.அதனால் கலவரம் ஏற்பட்டது.இது தனக்கு தெரியும் “என்பதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீடியாக்களிடம் கூறியிருந்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கமிஷன் முன்பு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் ரஜினி ஆஜரானால் ரசிகர்கள் கூடி விடுவார்கள்.இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடும் .அதனால் நேரில் ஆஜராவதற்கு தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறார்.
ரஜினியின் வழக்குரைஞர் இளம்பாரதி இன்று அபிடவிட் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
கேள்விகளை கொடுத்தால் அதற்கு எழுத்து மூலம் பதில் அளிக்கத் தயார் .நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று ரஜினியின் சார்பில் கூறப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
இதன் மூலம் குறுக்கு கேள்விகளையும் தவிர்க்கமுடியும் என்பதால் ரஜினி நேரில் ஆஜராவதை தவிர்க்கப்பார்க்கிறார் என்கிறார்கள்.
கலவரத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை தளபதி விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆனால் ஆறுதல் கூற வந்த ரஜினியைப் பார்த்து “நீங்கள் யார்?”என்றுஒருவர் கேட்டதன் விளைவுதான் மீடியாக்களிடம் ரஜினி கோபத்தில் “சமூக விரோதிகள் ஊடுருவியது தனக்கு தெரியும் “என்பதாக சொல்லி விட்டார் என்று கருதுவதற்கும் இடம் இருக்கிறது.