“வன்முறையை தடுக்கத்தவறியதற்கு காரணமே உளவுத்துறையின் தோல்விதான் காரணம். கலவரத்தை அடக்க முடியவில்லை என்றால் பதவியிலிருந்து விலகவேண்டும் “என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதற்கு தமிழ்நாடு பா.ஜ.க.விலிருந்து முணுமுணுப்புக்கூட கேட்கவில்லை.
அதாவது இன்று பகல் 12.30 மணிவரை அவர்கள் மவுனம் கலக நாஸ்தி என்று இருக்கிறார்கள். கார மிளகாயை பையிலேயே வைத்திருக்கிற எச்.ராஜா கூட வாயை திறக்கவில்லை .
ஒரே ஒரு ஆள் வாயைத் திறந்து சொன்னவர் அடுத்த சில மணி நேரங்களில் வாபஸ் வாங்கிக்கொண்டார்.
அவருடன்மறுபடியும் தொடர்பு கொள்ள முயன்றபோது தொலை பேசியை கையில் கூட எடுக்கவில்லை. இதைப்போலத்தான் கரு.நாகராஜனும்.
மேலிடம் வாய்ப்பூட்டு சட்டம் போட்டு விட்டதோ என்னவோ.!
ஆனால் கருத்து கஸ்தூரி “ரஜினிக்கு ஒற்றை வார்த்தையில் “ரகசிய புலனாய்வுத் துறை மட்டும்தான் காரணமா?” என்று கேட்டிருக்கிறார்.
பாஜக பம்முவதற்கு என்ன காரணமாக இருக்கும்?