தமிழ்ச்சினிமாவில் ஆணவக்கொலையை மையமாக வைத்து கன்னி மாடம் , திரௌபதி என்கிற படங்கள் அடுத்தடுத்து வெளி வந்தன.
இயக்குநர் போஸ் வெங்கட்டுக்கு கன்னி மாடம் முதல் படம்.
இயக்குநர் மோகன்.ஜி.க்கு திரௌபதி இரண்டாவது படம்.
இவரது படத்தில் ‘சாதி ‘இருக்க வேண்டும் என்பதை வற்புறுத்தி இருந்தார்கள். கல்யாணம் நடந்ததாக பொய்யாக சான்றிதழ் வழங்கி நூற்றுக்கணக்கான குடும்பங்களை நாசப்படுத்திய பத்திரப்பதிவாளராக ஒரு பிராமண கேரக்டரை காட்டியிருந்தார்கள்.
அது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு இயக்குநர் மோகன்.ஜி தனது திரௌபதி படத்தை பார்க்கும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். டிவிட்டர் வழியாக !
படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜெ.எஸ்.கே .கோபி விடுத்திருந்த அழைப்பைத்தான் மோகன் ஜி வழி மொழிந்திருந்தார்.