திரை உலகில் யார் யாருக்கு ஆப்பு வைப்பார்கள் என்பது தெரியாது. கூடவே இருப்பார்கள் ‘சக்’னு சொருகி விடுவார்கள். அந்த ஆப்பு அத்தி மரத்தினுடையது என்பது சிறப்பு.
போராடாவிட்டால் நியாயம் கிடைக்காது என்பது இங்கு பழகிப் போய்விட்ட வழக்கம்..
மார்ச் 27 ஆம் தேதி முதல் திரைப்படங்களை விநியோகிக்கப்போவதில்லை என பெரிய குண்டு போட்டிருக்கிறது விநியோகஸ்தர்களது கூட்டமைப்பு.
டி .ராஜேந்தர் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதலில் நடக்கிற பெரிய போராட்டம். இந்த போராட்டம் நடந்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும். அரசாங்கம் இறங்கி வருமா ஏறி மிதிக்குமா என்பது போகப்போக தெரியவரும்.
1. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவேடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.
2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..