இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அறிக்கை நேற்றே வந்திருக்க வேண்டும். ஒரு நாள் தாமதமாக வந்திருக்கிறது.
“தமிழன்தான் நாற்காலிக்கு தகுந்தவன்”என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லிவிட்டார் என பாரதிராஜா புளகாகிங்கிடம் அடைந்து பூரித்துப் போய் அறிக்கை விட்டிருக்கிறார்.
” எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம்’ உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார்’ என கொண்டாடும் ‘ரஜினி’ என்ற மந்திரத்தை விட,’ரஜினி’ என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன்.
இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது.
தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன்என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு,ஆகியவற்றின் மூலம்பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.
ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம்.
ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் ‘நாணய அரசியலில்’ அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனை ‘அரசனாக’ ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற ஓர் மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்.
அன்புடன்
பாரதிராஜா.
அன்புடன்
பாரதிராஜா.