யார் சொல்லிக்கொடுத்தது என்று தெரியவில்லை.
எவர் சொல்லிக்கொடுத்திருந்தால் என்ன அருமையாக காய் நகர்த்துகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற சந்தேகம் தற்போது வேறு வித மாற்றம் பெற்று இருக்கிறது“வருவார்.ஆனால் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர மாட்டார்.”
ஏன் என்பதற்கு அவர் சொன்ன விளக்கம்.
ஒரு இளைஞர் பதவியில் உட்காரவேண்டும் .60 வயதுக்கு மிகாதவராக இருத்தல் நலம்.
இதன் வழியாக அவர் “அரசியலுக்கு வரமாட்டேன் ; வந்தாலும் கட்சித் தலைமையில் மட்டுமே இருப்பேன்” என்பதை தெளிவாக சொல்லிவிட்டார். இப்படி ஒரு ஞானோதயம் சிலர் பெற்றிருக்கும் நிலையில்தான் பளபளப்பான இன்னொரு கருத்து கண்மணி உதயமாகி இருக்கிறார்.
என்னவொரு தெளிவான சிந்தனை தெரியுமா?
நமக்குத் தெரிந்த ஜோதிலட்சுமி, ஜெயமாலினி .சிலுக்கு சுமிதா, டிஸ்கொ சாந்தி இன்னும் சிலபல கவர்ச்சி கடல்கள் எல்லாம் உள்வாங்கி விட்ட நிலையில் மீரா மிதுன் என்கிற கன்னிப்பெண் ( அவரே சொன்னதுதாங்க.!) கருத்துகள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்.
“சட்டம் ஒழுக்கம் கெட்டுப்போச்சு,லஞ்ச லாவண்யம் பெருகிப்போச்சுன்னு அடிச்சு சொல்றதுக்கு என்னை விட்டா வேறு ஆள் யாரு இருக்கா ? எங்கே சொல்லுங்க ,பார்க்கலாம்?”என்று நம் மூக்குக்கு அருகில் விரலை நீட்டிக்க கேட்கிறார் இந்த கண்மணி
மீரா மிதுன் சொல்வதென்ன?
“எதுக்கு குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுக்கணும்? கிரிமினல்ஸ் எப்பவுமே கிரிமினல்ஸ்தான்! அவங்க தண்டனை காலம் முடிகிற வரை ஜெயிலுக்குள்ளேதான் இருக்கணும்.அவங்களுக்கு எதுக்குங்க ஜாமீன்?
கிரிமினஸ் ‘ஃபிரியாக ‘திரியக்கூடாது.
நல்லவங்களை ஜெயிலுக்குள் போடக்கூடாது.
சட்டம் ஒழுங்கு கெட்டுப்போச்சு ,லஞ்சம் பெருகிப்போச்சு ,சட்டம் ஒழுங்கு பத்தி பேச என்னைத்தவிர வேறு யாருக்கு தைரியம் இருக்கு?
நம்ம சட்டம் ஈஸியா வளையும். கெட்டவன் ஈஸியா ஜாமீனில் வெளியில் வந்திடுறான் .சிஸ்டம் கெட்டுப்போச்சு.” என்கிறார் மீரா மிதுன்.
இவங்களையும் தமிழ்நாடு சந்தித்தே ஆகவேண்டும்! இயக்குனர் இமயம் என்ன கருத்து சொல்லப் போகிறார் ?