கொரானா கொள்ளை நோய் தாக்குதலுக்குப் பிறகு பல வகைகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு எத்தனையோ வழி முறைகளை கையாண்டு வருகிறது.
பிரதமர் மோடி சில யோசனைகளையும் அவ்வப்போது சொல்லி வருகிறார்.இதற்கு கண்டனமும் வருகிறது..
இந்திய மக்களின் ஒற்றுமை உணர்வினை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் பிரதமரின் யோசனைகள் இருந்ததாக சிலர் சொல்கிறார்கள்.
பிரதமரின் யோசனைகளை சிவசேனா கட்சி கடுமையாக கண்டித்திருக்கிறது.
“கை தட்டுவதால் அல்லது தட்டுகளை தட்டி ஒலி எழுப்புவதால், விளக்கேற்றுவதால் கொரானாவை ஒழித்துவிட முடியாது.மக்களிடம் பிரதமர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவாக சொல்லவேண்டும். உத்தரவுக்கு பணியாதவர்களுக்கு எந்தவகையான தண்டனை என்பதையும் அறிவிக்க வேண்டும்” என்று சிவசேனாவின் அதிகார பூர்வமான பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கிறது.