ஊரடங்கு சட்டம் இருக்கிறபோது எந்த விவசாயத்தை பண்ணுவது?
எங்கே போய் விதை வாங்குவது உரம் தேடுவது?
வித்தியாசமாக சிந்தித்தார்கள் மூன்று மூளைக்காரர்கள் !அதில் ஒருவர் திண்டுக்கல் வேங்கையன் .மற்ற இருவர் கேரளத்தை சேர்ந்த அனீஸ் ,மஜித்.
அவர்களது விளை நிலம் இடுகாடு.!கல்லறை.!
தரையில் சாணத்தைப் போடு. கஞ்சாவை பயிரிடு.வளருவதை சூரியன் பார்த்துப்பான்.என்கிற கொள்கையில் சாகுபடி செய்தார்கள்
கஞ்சா நன்கு வளர்ந்ததும் அதன் இலைகளை பறித்து காயப்போட்டு விற்பனை செய்வது என்கிற பலே திட்டம் எப்படியோ போலீசுக்கு தெரிந்து விட்டது. மாமூல் எதுவும் வாங்காமல் இந்த ஊரடங்கு கால விவசாயிகளை கைது செய்து விட்டது.
என்னமா யோசிக்கிறாய்ங்க!