நல்ல சாராயம் ,கள்ள சாராயம் ,நாட்டுச்சரக்கு ,ஃ பாரின் சரக்கு இதில் எதுவாக இருந்தாலும் கெடுவது என்னவோ லிவர்தான்..! அளவோடு சாப்பிட்டு நலமுடன் வாழ்கிறேன் என்று சொல்கிறவர்கள் இல்லற வாழ்க்கையில் அனுபவிக்கிற ஏமாற்றங்கள் …சாவுடா என்றுதான் சொல்லும்.
ஊரடங்கு உத்திரவு இருந்தாலும் டாஸ்மாக் சரக்கு தாராளமாக கிடைக்கிறது என்கிறார்கள். சிலர் கண்டதை குடித்து கண்டமாகிப் போகிறார்கள்.
கஸ்தூரி காட்டமாகவே கேட்டிருக்கிறார்.
“கள்ள சாராயத்தை பிடியுங்க, மதுவுக்கு limit , permit வையுங்க, தப்பை தடுக்க முடியலைன்னா போலீஸ் எதுக்கு? இந்த லாஜிக் படி பாத்தா அரசாங்கமே கள்ள நோட்டு அடிக்கணும், கஞ்சா விக்கணும் !”
உடனே கஸ்தூரிக்கு பதில்.!
“கள்ளச்சாராயம் இதவிட மோசமாகி விடும் பரவாயில்லையா, அனைத்துமே ஒழித்தால் நல்லா இருக்கும். கள்ளச்சாராயத்தால் அதிகளவு பாதிப்பு ஏற்படும், அதுக்கு மதுக்கடையே பரவாயில்லை”என்று டிவிட்டரில் பதில் வர ,
“கரெக்ட் ! ஆண்டவனுக்கே பொறுக்கலை போல ! Please dont open TASMAC now!”என்று பதில் சொல்லியிருக்கிறார் கஸ்தூரி.