மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ஓகே கண்மணி படம் அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம் என்ற புதிய தகவலை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். மணிரத்னம் இயக்கத்தில் பதினான்கு வருடங்களுக்கு முன்பு வெளியாகியது மாதவன் அறிமுகமாகிய அலைபாயுதே படம்.. இந்நிலையில், தற்போது ஓகே கண்மணி என்ற படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.. . இதில், துல்கர் சல்மானும், நித்யா மேனனும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். தற்போது ,படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், விரைவில் இப்படத்தைவெளியிட திட்டமிட்டு வருகின்றனர். .இந்நிலையில் ஓகே கண்மணி தொடர்பாக இப்படத்தின் இயக்குனர் பி.சி. ஸ்ரீராம் கூறுகையில், ‘‘ஓகே கண்மணி படத்தை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம். ஆனாலும் இந்த படத்தின் கதை புதுமையாக இருக்கும். இப்போதைய கால கட்டத்திற்கு தகுந்த மாதிரி கதை இருக்கும். சிறந்த காதல் கதை” என்கிறார்.