வஞ்சிக்கோட்டை வாலிபன் படம் பார்க்காதவர்கள் யூ டியூப் போயாவது பத்மினி – வைஜயந்திமாலா போட்டி நடனம் பார்த்து விடுங்கள் .
சூப்பரா இருக்கும். ராமச்சந்திரா இசையில் கொத்தமங்கலம் சுப்பு வரிகளை பி.லீலாவும் ஜிக்கியும் அற்புதமாக பாடி இருப்பார்கள். நடனத்தில் தீப்பொறி பறக்கும்.
அதே வரிகளை வனிதா விஜயகுமார் ,லட்சுமி ராமகிருஷ்ணன் பாடினால் எப்படி இருக்கும்?
கற்பனை பண்ணிப்பாருங்கள்.!
லட்சுமி : சாதுர்யம் பேசாதடி ..என் சலங்கைக்குப் பதில் சொல்லடி!
வனிதா :ஆடுமயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தாயோடி!
லட்சுமி : இன்னொருத்தி நிகராகுமோ?இடி இடித்தால் மழையாகுமோ?
வனிதா :மின்னலுக்கு அஞ்சேனடி .வீண் வாதம் ஏனடி?
தற்போது இதே கதைதான் நடந்திருக்கிறது. மூணாவது கல்யாணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமாரும் நடிகை,டைரக்டர் ,தயாரிப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
“பீட்டர்பாலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் விவாகரத்தாகவில்லை. வனிதா – பீட்டர் பால் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை. திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை? படித்தவர்கள் செய்கிற காரியமா இது. அதிர்ச்சி அடைந்தேன். பெரிய தவறு
வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என்று நினைத்தேன். அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை””என்பதாக லட்சுமி ராமகிருஷ்ணன் டிவீட் பண்ணியிருந்தார்.
பொங்கிவிட்டார் வனிதா விஜயகுமார்.
கணவன் மனைவியாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரியாதவிஷயத்தில் ஏன் தலையிட்டு கவனம் செலுத்துறீங்க? உங்களுடைய வேலை இல்லை.
நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம்.
இது உங்களுடைய டி வி. ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை”என்பதாக கொதித்திருக்கிறார்