மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் படகோட்டியில் நடித்தவர் நடிகை ஜெயந்தி. பின்னர் ஜெமினி கணேசனுடன் புன்னகை ,இரு கோடுகள் ஆகிய படங்களில் நடித்து பிரபலம் ஆனார். கன்னடத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் அதிக படங்களில் நடித்த பிற மாநில நடிகைகளில் இவர் முக்கியமானவர்.
இவர் திடீரென பெங்களூரு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் .வென்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளது. இவரை மகன் கிருஷ்ணகுமார் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்.
கடந்த 35 ஆண்டுகளாக கடுமையான ஆஸ்துமா நோயினால் தினமும் இன்ஹேலர் பயன்படுத்தி வந்திருக்கிறார். கொரானாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்று சோதனை செய்திருக்கிறார்கள்.
இவரது கணவர் பெக்கட்டி சிவராம். மனவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். தற்போது பெக்கட்டி இல்லை .மரணம் அடைந்து பத்தாண்டு கடந்து விட்டது .