திரைத்துறைக்கான உயர்ந்த விருது ‘ தாதா சாஹேப் பால்கே ‘விருது.
இந்த விருது யாருக்கு வழங்குவது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை.
ஆனாலும் மத்திய அரசின் ஆய்வில் இசைஞானி இளையராஜாவின் பெயர் இருப்பதாக சிலர் தெரிவிக்கிறார்கள். இது யூகத்தின் அடிப்படையில் சொல்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு அந்த விருதினை வழங்க வேண்டும் என்கிற சிந்தனை மந்திய அரசுக்கு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக துணை ஜனாதிபதி அலுவலகத்தில் பேசிக்கொள்கிறார்கள் என்கிறார்கள்.
இதற்கிடையில் ‘அத்தகைய விருது இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு வழங்கப் படவேண்டும்’ என்று மத்திய அரசின் விருதுகள் பெற்ற திரைத்துறையினர் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இளையராஜாவின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
இமயமும் இசைஞானியும் நெருங்கிய நண்பர்கள் என்பது கோரிக்கையில் கையெழுத்துப் போட்டவர்கள் அனைவருக்குமே தெரியும்.