நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தன்னுடைய அம்மாவின் பெயரைக்கொண்டு ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த அமைப்பின் பெயர் மகிழ்மதி இயக்கம்
இவ்வியக்கம் குறித்து திவ்யாசத்யராஜ் கூறியதாவது,
‘’இந்தியாவில் ஒர் ஆண்டின் கணக்கின் படி 10 மில்லியன் திருமணங்கள் நடை பெறுகின்றன அத்திருமணவிழாக்களில் பரிமாறப்படும்30 விழுக்காடு உணவு வீணாகின்றன’’. உணவும், ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டுந்தான் என்பது நியாயம் இல்லை.( பொதுவுடமைக்கருத்து.)
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கப் படவேண்டுமாயின்அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை.
‘மகிழ்மதி இயக்கம்’ அரசியல் கட்சியோ,, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரமான உணவு வழங்குகிறோம்
கொரோனா நேரத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம் மேற்கொள்ளும் .‘மகிழ்மதி இயக்கம்’ என் கனவு. என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர்
ளவக்க வேண்டும் என்று யோசித்தபோது , ‘மகிழ்மதி’ என்ற பெயர்தோன்றியது. என் அம்மா பெயர் மகேஸ்வரியின் முதல் பாதியை என் இயக்கத்தின் பெயரில் இணைக்கவேண்டும் என்பது என் ஆசை”.என்கிறார்.