சென்னையில் நடந்த ‘தோழா ‘பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதெலுங்கு நடிகர் நாகார்ஜுனா பேசியதாவது,, “நான் சென்னையில் பிறந்தவன். நானும் சென்னைக்காரன்தான்.இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவம்.இப்படத்தின் மூலம் நானும், கார்த்தியும் மனதளவில் மிகவும் நெருங்கி விட்டோம் . படத்தில்முழுக்க,முழுக்க நான் சக்கர நாற்காலியிலேயே உட்கார்ந்து இருக்கும் கேரக்டர்.
என்னை உட்கார வைத்து விட்டு கார்த்தியும் தமன்னாவும் நிறைய டான்ஸ் ஆடி இருக்கிறார்கள் . அப்போது எனக்கும் எழுந்து ஆட வேண்டும் போல இருக்கும்.
இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா ? சூர்யாவுக்கு ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. குறிப்பாக, தெலுங்கானாவில் இருக்கும் ரசிகர் படை அவரது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. சூர்யாவின் படம் தெலுங்கில் டப்பிங் ஆகி வருகிறது என்றால் தெலுங்கு ஹீரோக்கள் பயந்து போய் தங்கள் படத்தின் ரிலீசை தள்ளி வைப்பார்கள். அவ்வளவு பெரிய மாஸ் அவர் . அவரது அடுத்த படம் 24- என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.