வருகிற மே மாதம் தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெறும் என்பதால் அரசியல் கட்சிகள் அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியிருக்கின்றன.
கொரானா ஊரடங்கல் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத அளவுக்கு இ பாஸ் தடை.
இதனால் கட்சிகள் மத்தியில் கடுங்கோபம் நிலவியது. ஆளும் கட்சியினர் மிகவும் அதிருப்தியில் இருந்தார்கள். இதையெல்லாம் உணர்ந்ததாலோ என்னவோ முதலமைச்சர் எடப்பாடி இ.பாஸ் பெறுவதில் இருந்த தடைகளை தளர்த்திவிட்டார் . இதனால எல்லா கட்சிகளும் கூச்சல் போடுவதை நிறுத்திவிட்டன .
ஆளும் கட்சியில் இப்போதே அடுத்த முதல்வர் யார் என்கிற சிக்கல் ஏற்பட்டுவிட்டது. சண்டையே நடக்கிறது என்றும் சொல்லலாம்.
ஓபிஎஸ் வீட்டில் பல அமைச்சர்கள் கூடிப்பேசியதாகவும் ,அவர்கள் ஒரே மனதுடன் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் தான் என்பதாக முடிவு செய்தாகவும் செய்தி பரவியது. இதன் விளைவாக சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தது. அதை இபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்ததும் நடந்தது.
யார் முதல்வர் என்பதை தற்போதைய அதிமுகவினால் முடிவு செய்ய முடியாது.என்பதுதான் நாடறிந்த உண்மை. இவர்களின் தலை விதியை எழுதுகிற பிரம்மன் புதுடெல்லியில் இருக்கிறான்.அவன் நடத்தாத திருவிளையாடலா? இரு மொழிதான் எங்களது கொள்கை என அறிவித்தபிறகு எதற்காக ஒரு குழு என்று அரசியல்வாதிகள் கேட்கிறார்கள்.
இந்த பிரச்னையை இப்படியே விட்டுவிடக்கூடாது என்பதால் கட்சி சார்பில் ஓபிஎஸ் அண்ட் இபிஎஸ் இருவரும் சேர்நடித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.