கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் தாராளமாக நடமாட தொடங்கி விட்டனர். என்றாலும், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில், சிலர் முக கவசம் இன்றியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், கும்பலாக கூடி நிற்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, துரதிஷ்டவசமாக இதுதான் நம் மக்கள் காட்டும் சமூக பொறுப்பு. பொது இடங்களில் ‘மாஸ்க்’அணியக் கூட யாரும் விரும்புவதில்லை. இந்த கொரரோனா வைரசை எப்படி நாம் எதிர்த்து போராட போகிறோம்.
இந்த நோய் தற்போது அறிகுறி எதுவும் இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. அவர்களின் உயிரை பணயம் வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் நபர்களின் உயிரையும் பணயம் வைக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் இந்த ட்வீட் வைரலாக பரவி வருகிறது.