
கடந்த வெள்ளத்திலிருந்து கூட தமிழக அரசு இன்னும் பாடம் கற்கவில்லை என தமிழக அரசை கமல்ஹாசன் கடுமையாக தாக்கியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
,”ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது.கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை.கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை.வடிகால்கள் வாரப்படவில்லை.குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












