“விடாது கருப்பு” மாதிரி போதை மாத்திரை மச்சான்ஸ் ,மச்சினீஸ் வகையறாக்களை கர்நாடக போலீசார் விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் சில பார்ட்டிகள் இருக்கிறார்கள் ,அவர்கள் அரசியல்வாதிகளால் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள் என்கிறார்கள்.
கன்னடத்தில் மாட்டிய இரண்டு நாயகிகள் தற்போது சிறையில் இருந்தாலும் அவ்வப்போது போலீசுக்கு தகவல்களைத் தருகிறார்களாம். பெங்களூரு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தற்போது மும்பையில் முகாம் .
விவேக் ஓபராயின் வீட்டை சோதனையிட்டிருக்கிறார்கள். அவர்கள் தேடுவது விவேக் ஓபராய் மச்சான் ஆதித்ய ஆல்வாவை!
இந்த ஆதித்யா ஆறாவது குற்றவாளி. .தலைமறைவாக இருக்கும் தேடப்படுகிற குற்றவாளியாகிவிட்டார்.
விவேக் ஓபராய்க்கு அவரது மச்சானைப்பற்றி நன்றாகத் தெரியும் ஆனால் சொல்ல மறுக்கிறார் என்கிறது போலீஸ் வட்டாரம்,
மறைந்த முன்னாள் கர்நாடக மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன்தான் ஆதித்யா ஆல்வா. இவரது சகோதரி பிரியங்கா ஆல்வாவைத்தான் விவேக் ஓபராய் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்.
மலையேறினாலும் மச்சான் தயவு வேண்டும் என்பதால் விவேக் மறைக்கிறாரோ!ஆனாலும் விடாது போலீஸ்.1