
நடிகைகள் தற்கொலை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
இதற்கு காரணம் பலவகையான மன அழுத்தம் என சொல்கிறார்கள். குறிப்பாக அடஜஸ்ட்மென்ட் ,காதல் ஏமாற்றம், தொழில் விரக்தி என்பவையெல்லாம் திரைத்துறை உள்ளிட்ட பல பொழுதுபோக்கு நிறுவனங்களில் சாதாரணமாகிவிட்டது.
தற்போது சின்னத்திரை நடிகை சித்ரா திடீர் தற்கொலை என்பது இன்றைய முக்கிய செய்திகளில் ஒன்று.
சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் நடிகை சித்ரா. ‘சரவணன் மீனாட்சி (சீசன் 2)’ தொடரில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார்.
இந்த தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்பதால் இவருக்கு தனி ரசிகர் வட்டமும் உள்ளது.
,சித்ரா சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வருகிறார் . படப்பிடிப்புக்கு வசதியாக சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார் சித்ரா.
28 வயதான சித்ராவுக்கு,கடந்த ஆகஸ்ட் மாதம் , ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவரும் இதே ஓட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு படப்பிடிப்பு முடிந்த பிறகு ஓட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா.
அப்போது தான் குளிக்கப்போவதாகவும், எனவே நீங்கள் வெளியே நில்லுங்கள் என்றும் ஹேமந்திடம், சித்ரா கூறியுள்ளார்.இங்கேதான் இடிக்கிறது. பாத்ரூமில்தான் குளிக்கப்போகவேண்டும். நட்சத்திர ஓட்டலில் வசதியான பாத் டப் உள்ளிட்ட பல வசதிகள் உள்ள தனி ரூம் வசதி உண்டு. அது ஒன்றும் திறந்தவெளி பாத்ரூம் இல்லை. கன்னத்தில் காயம்பட்ட நிலையில்தான் பிணத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னரே தங்களுக்கு பதிவுத் திருமணம் நடந்து விட்டதாக ஹேமந்த் கூறியிருக்கிறார்.
ஹேம்நாத் ரூமை விட்டு வெளியே வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. கதவை தட்டிப் பார்த்தும், பதில் வரவில்லை.எனவே அதிர்ச்சியடைந்த ஹேமந்த் மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே போய் உள்ளார். அப்போதுதான் அங்கு சித்ரா புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலிஸாருக்கு ஹேமந்த தகவல் தெரிவித்தார். போலீசார் சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ராவில் உடலை கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து ஓட்டல் நிர்வாகிகள், ஹேமந்த் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். சித்ராவின், தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர் சார்ந்த துறையில் இருந்து கொடுக்கப்பட்ட வேறு ஏதும் அழுத்தங்கள் இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.












