
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’.விஜய் நடித்த ‘புலி’ படத்திலும் வில்லனாக நடித்தவர் ,கிச்சா சுதீப்.
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘முடிஞ்சா இவன பிடி’ படத்திலும் நடித்திருக்கிறார்.
தற்போது கன்னடத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சுதீப். அனூப் பந்தாரி இயக்கத்தில், தனது 25 வ து படமாக,தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம்என ஐந்து மொழிகளில் உருவாகும் ”விக்ராந்த் ரோனா” என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் லோகோ மற்றும் 180 நொடிகள் ஓடும் முன்னோட்டம் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் காலிஃபாவில் வரும் ஜனவரி 31 அன்று கிச்சா சுதீப் திரைத்துறையில் நுழைந்து 25 வருடம் நிறைவடைவதை ஒட்டி வெளியிடப்படுகிறது.












