சமூக ஆர்வலர் ,நடிகை ,கோபக்காரி என்கிற சில முகங்கள் கஸ்தூரிக்கு.!
சிறுமை கண்டு பொங்குவார். தனது கருத்துகளுக்கு எதிராக வருகிற ஆபாசம் வன்முறை இல்லாத பதில்களை எதிர்கொள்ளக்கூடியவர்.
இவர் தற்போது இந்தியத் தலைநகரான டெல்லியில் கோவிட் 19 நோயாளிகள் படுகிற சித்திரவதைகள் பார்த்து சினமிகுந்த கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்.
“டெல்லி மக்களின் கொடுங்கனவு ,கோவிட் 19 கொள்ளை நோயாகத்தான் இருக்க முடியும்.
ஆக்சிசன் பற்றாக்குறை .அதனால் கோவிட் 19 நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்!
வீட்டில் மரணம் அடைவதற்காகவா? அங்கேயே புதைத்துவிடுங்கள் என்பதன் முன்னெச்சரிக்கையா ? இடுகாடுகளும் சுடுகாடுகளும் அதன் கொள்ளளவையும் தாண்டி திக்குமுக்காடுகிறது.!
என்னால் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய முடியும்? யார் உதவுவார்? என்ன செய்யப்போகிறோம்?