கட்டுக்குலையாத உடல்.. சின்ன கண்கள். நீளமான முகத்துக்கு ஏற்ற நெற்றி. எடுப்பான நாசியில் அந்த ஒற்றை மூக்குத்தி உட்கார்ந்திருக்கிற அழகே அழகு.!எழுதிப்பார்க்கலாமா என்கிற அளவுக்கு பால் வண்ண மேனி. சிவந்த உதட்டுக்கு மேலும் சிவப்பேற்றிய லிப்ஸ்டிக் அழகு. அடடா இப்படி வர்ணித்துக்கொண்டே போகலாம் அந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் சுரேகா வாணியை.!
வயது 40. கணவன் இல்லை.இறந்து ஓராண்டுதான் ஆகிறது. தோளுக்கு உயர்ந்து வளர்ந்து வாலிப செருக்கு-மிடுக்குடன் மகள் .யாரும் பார்த்தால் அக்காள் தங்கையா என்றுதான் கேட்பார்கள்.! மகளின் திரைப்பட பிரவேசம் விரைவிலேயே நடக்கும் என்கிறார்கள்.
சரி எதற்கு இவ்வளவு முகவுரை ?
திரையுலக பிரபலங்கள் ,நடிகர்கள் ,அங்கிள் என அழைக்கப்படுகிற நிலையில் இருக்கிற பணம் படைத்தவர்கள் “நான் ரெடி,நீ ரெடியா ?” என்று கல்யாண புரபோசல்கள் அனுப்பியிருக்கிறார்கள்.
இவர்களில் சிலர் தமிழ்நாட்டிலிருக்கிறார்கள்.
சுரேகா வாணி என்ன நினைக்கிறார்?
“முன்பை காட்டிலும் தற்போது நான் செமயாக இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள்.ஆனால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் நான் பார்த்துவிட்டேன்.எனக்கு இப்போது காதல் தேவையா,இல்லை.! அப்படியே நான் இன்னொரு கல்யாணம் செய்வதாக இருந்தால் பணம் எனக்கு பெரிதல்ல” என்கிறார்.