சமீபத்தில் நடிகர் சித்தார்த் ,உபி. முதல்வர் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்காக அவருக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வரும் நிலையில், சித்தார்த் வாயே திறக்கவில்லையே என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர் சித்தார்த்தை வம்புக்கிழுத்து வருகின்றனர்.
மேலும் அவரை சிலர் ‘கூத்தாடி’ என்றும் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. சித்தார்த் அதை கண்டு கொள்ளவில்லை.,ஆனால் நடிகை கஸ்தூரி காட்டமாகிவிட்டார். கூத்தாடி என்கிற சொல் அவரை காயப்படுத்திவிட்டது.
“எதிரிகளையும் மதிப்பதுதான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். சித்தார்த் தொழிலை பற்றி விமர்சனம் செய்ய நீங்கள் யார்? நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா? பாஜக ஆதரவு நடிகர்கள் இதனை ஏற்று கொள்வார்களா?” என்று கேட்டிருக்கிறார்.
அதே நேரத்தில் சித்தார்த்தின் விமர்சனமும் தவறுதான். அவருடைய எதிர்மறை பதிவு அவருக்கே தற்போது திரும்புகிறது. ஆனாலும் அவரை விமர்சனம் செய்பவர்கள் அவருடைய தொழிலை விமர்சனம் செய்வதைத்தான் நான் கண்டிக்கின்றேன்’ என்றும் பதிவு செய்து இருக்கிறார்.
மேலும் ’சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. நடிகர்கள் அனைவரின் பிரதிநிதி சித்தார்த் இல்லை.
ரஜினி, கங்கனா, குஷ்பு, காயத்ரி ரகுராம், மிதுன் சக்ரவர்த்தி, அக்ஷய் குமார் இவங்களுக்கு பிஜேபி ல என்ன பேரு?” என்கிற கஸ்தூரியின் காட்டமாக கேள்வியில் நியாயம் இருக்கிறதா இல்லையா?