“ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக் கோனே ,காசு காரியத்தின் மேல் கண் வையடா தாண்டவக்கோனே “என்று பாடி வைத்தது பொய்யாகுமா?
கர்ப்பமாக இருந்தாலும் சமூக வலைத் தளங்களில் படங்களை போடாமல் இருக்க முடியவில்லை காஜல் அகர்வாலினால்.!
கணவருடன் துபாய் சென்றுள்ள காஜல் அகர்வால் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் தன்னை படம் எடுத்துவிட்டு அதற்கு தகுந்த தலைப்பினையும் தேர்வு செய்து சமூக வலை பக்கங்களில் போட்டு வருகிறார்.
அப்படிப்பட்ட படம்தான் நீங்கள் இங்கே பார்ப்பது.
சற்றே மேடிட்ட வயிறு கர்ப்பம் வளருகின்ற அறிகுறி. முகத்தில் அதன் செழுமை,மகிழ்ச்சி !முகத்தில் சூரியக்கதிர்களின் செல்லத் தழுவல்.அந்த தழுவலைத்தான் தலைப்பாக போட்டிருக்கிறார்
“சூரியன் செல்லமாக எனது முகத்தை கொஞ்சுகிறான்.!”
காஜலுக்கு இது முதலாவது பிரசவம். முதலாவது குழந்தையின் வரவு வருகிற மே மாதம்.