கபாலி ஆடியோ நிகழ்சிக்கே வராத ரஜினிக்கு என்ன ஆச்சு? அமெரிக்காவில் என்ன தான் நடக்கிறது! என ரஜினி ரசிகர்கள் குமுறி வரும் நிலையில்,, எந்திரன் 2 ன் பளுவாலும், அப் படக்குழுவினரின் அலட்சியத்தாலும் ரஜினிகாந்த் ஒரு விபரீத முடிவை எடுத்திருப்பதாக கோடம் பாக்கம் கிசுகிசுக்கிறது.
நடந்த சம்பவம் இதுதான் என்கிறது இணையதள வட்டாரம்.. கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதில்கயிறு கட்டி ரஜினியை தூக்க வேண்டிய சூழ்நிலை. வேறு வழியில்லாமல் ரஜினியும் சம்மதிக்க… அவரை மேலே தூக்கிவிட்டார்களாம். அந்த நேரத்தில்தான் அந்த நைலான் கயிறு முறையாக சுழலாமல் முரண்டு பிடித்து , அவரது இடுப்பு பகுதியில் இறுக்கத் தொடங்க, கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. நிலைமையின் விபரீதம் புரிந்த ரஜினி உடனடியாக கயிற்றை இறங்குங்க என அலற , யூனிட்டே பரபரப்பானதாக அதிர்ச்சியில் ஆழ்ந்ததாம். அந்த நிமிஷமே இயக்குனர் ஷங்கரை அழைத்த ரஜினி, “இதுவரைக்கும் எவ்ளோ செலவானதோ… அதை கொடுத்துடறேன்.ஆளை விட்டா போதும்” என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டதாம் படக்குழு!

இதை தொடர்ந்துதான் அவருக்கு கால்கள் இரண்டும் வீங்கி, உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்திருந்தாலும் அதில் 25 நாட்கள் கூட ரஜினியை பயன்படுத்தவில்லையாம். இனிமேலும் அவரது கால்ஷீட் தேதிகளை குறைத்து எப்படியோ படத்தை முடித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர். இதையடுத்து ரஜினிக்கு பதிலாக ஏற்கனவே திட்டமிட்டபடி டூப்பை பயன் படுத்து மீதி உள்ள படப்பிடிப்பை முடிக்க திட்ட மிட்டுள்ளதாம் ஷங்கர் தரப்பு!