சிலம்பரசன் ,ஹன்சிகா நடித்திருக்கிற படம் ‘மஹா .’
விக்னேஷ் சிவன் -நயன்தாரா தயாரிப்பில் வெளியாகிற படம் ‘காத்துவாக்கில ரெண்டு காதல்.’
இந்த இரண்டு படங்களும் ஏப்ரல் 28 -ம் தேதி வெளிவருகின்றன .
“இதில் என்ன வியப்பதற்கு இருக்கு?” என அப்பாவி கேட்டதற்கு ,
“இருக்குடா மச்சான்” என்கிறான் விவரமானவன்.
சொல்லத்தொடங்கினான் விவரமானவன் .
“இளவரசன் சிலம்பரசன் காதலித்தது நயன்தாராவை.! இந்த காதல் புட்டுக்கிட்டதும் நயன் காதலித்தது பிரபுதேவாவை.! இந்த காதலும் காத்து வாக்கிலே கரைந்து போனதால் இறுக்கமாக பிடித்துக்கொண்டது விக்னேஷ் சிவனை.! ஆக ‘காத்து வாக்கிலே ரெண்டு காதல் ‘ என்பதின் கதையும் இப்படிப்பட்டதுதானா? இதைத்தான் விக்னேஷ் சிவன் சொல்லியிருக்கிறாரா இந்த படத்தில்?”
“ஓ ,நீ அப்படி யோசிக்கிறாயா ?” என மூக்கை சொரிந்து கொண்டான் அப்பாவி.!.
“இன்னொரு பாயிண்டில் பார்த்தால் சிலம்பரசனை சீண்டிப்பார்க்கிறாரா விக்னேஷ் சிவன், ,அந்த சீண்டலுக்கு நயன்தாரா காரணமாக இருப்பாரா என்கிற சந்தேகமும் எழுகிறது.”என்றான் விவரமானவன் .
“எப்படியெப்படி ?”
“நயனின் காதலராக இருந்தவர் எஸ்.டி .ஆர்., பின்னர் ஹன்சிகா மோத்வானியை காதலித்தார். ஆக ஒருவருக்கு இரண்டு காதல். இந்த கதையாகவும் இருக்கலாம் அல்லவா?காதல் முறிவுக்குப்பிறகு சிலம்பரசனுடன் இணைந்து நடித்தவர் நயன். அதைப்போல ஹன்சிகாவின் காதல் முடிவுக்கு வந்த பின்னரும் ஹன்சிகாவுடன் சிலம்பு நடிக்கிறார் அல்லவா !இப்படியோசியேன் !”
இந்த பேப்பர்காரய்ங்க எப்படி யோசிக்கிறாய்ங்க பாருங்க! எப்டிரா மழை பேயும் !