பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரும், வசனகர்த்தாவும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று காலை 10.30மணிக்கு காலமானார். அவருக்கு வயது 75.சென்னை தியாகராய நகரில் உள்ளஅவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது.
இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். அன்னக்கிளி, உல்லாசப்பறவைகள் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ரஜினி, கமலைக் கொண்டு அதிகப் படங்களைத் தயாரித்துள்ளார். பஞ்சு அருணாசலத்தின் மறைவுக்குத் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.பஞ்சு அருணாசலத்துக்கு சுப்பு பஞ்சு,அருணாசலம், என இரண்டு மகன்களும்,கீதா.சித்ரா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் சுப்பு பஞ்சு நடிகராகவும் தயாரிப்பளாராகவும் உள்ளார் அமெரிக்காவில் உள்ள மகள்களுக்கு பஞ்சு அருணாசலம் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் சென்னை வந்ததும் பஞ்சு அருணாசலத்தில் இறுதிசடங்கு நடக்கும்.