கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா குறித்து இயக்குனர் சாமி கூறியதாவது, “அது 2006 ஆம்ஆண்டு.நான் ‘உயிர்’ படம் எடுக்கும் போது படத்தின் ஒளிப்பதிவாளர் பவுசியாவின்மலையாளி நண்பர் அருண் பழக்கம். அவர் மூலம் இவர் அறிமுகமானார்.நான் ‘சரித்திரம்’ படம் இயக்கிய போது கலாபவன் மணியின் மகனாக நடிக்கவைத்தேன் சிறு வேடமென்றாலும் அவரிடம் திறமை மட்டுமல்ல சகிப்புத்தன்மையும் அர்ப்பணிப்பு உணர்வும் இருப்பதைக் கண்டேன்.’கங்காரு’ வில் நடிக்க வைப்பது என்று முடிவு செய்து விட்டேன் அப்போது ஒருதயாரிப்பாளர் வந்து தன் மகனை அந்த ரோலில்நடிக்கவைக்கபத்துலட்சம்தருவதாகக் கூறினார். அறிமுகம் செய்யுங்கள் என்றார் நீங்கள் ஒரு கோடி
ரூபாய் கொடுத்தாலும் நான் நடிகனை மாற்ற மாட்டேன். என்று கூறித் திருப்பிஅனுப்பினேன். அந்த அளவுக்கு அர்ஜுனா மீதுஎனக்குநம்பிக்கை வந்துஇருந்தது. படப்பிடிப்புக்குப்போனபிறகுஎன்கருத்துசரியானதுதான் என்றுநீரூபித்தார்.படப்பிடிப்பு பரபரப்பாக கொடைக்கானலில் நடந்து கொண்டிருந்த போது அர்ஜுனாகாலில் அடிபட்டு கட்டைவிரல் நகம் உடைந்து விட்டது. வலியில் துடித்துவிட்டார். இருந்தாலும்சமாளித்துக் கொண்டு காலில் கட்டுப்போட்டுக் கொண்டேமரமேறும் காட்சி முதல் கயிறுகட்டிஏறும்காட்சிவரைஎல்லாம்நடித்தார்.படம்முழுக்கவெறுங்காலுடன் தான்நடந்து,நடிக்கவேண்டும்இந்தக்கேரக்டர்அப்படித்தான்என்று சொல்லி வைத்திருந்தேன். அதனால் கால் தெரியாதகாட்சிகளில் கூட காலில் செருப்போ ஷூவோ அணிய மறுத்து விட்டார். அந்தஅளவுக்கு அந்த கேரக்டரை நேசித்தார்.பச்சைத் தண்ணியில குளிக்கச் சொன்னால் குளிப்பார். . கொடைக்கானலில் அப்போது கடுங் குளிர். பாதி நேரம் பனி மூட்டத்தால் கண்ணு கூட தெரியாது. படப்பிப்பு நடந்த இருபது நாட்களில் நாங்கள் எத்தனையோ முறை குளிர் போக்க தீ மூட்டி அமர்ந்திருக்கிறோம். ஆனால் ஒருமுறை கூட அர்ஜுனா குளிர் காய வந்ததில்லை. அப்படி குளிர் காய வந்தால் அடுத்த சீனில் நடிக்கும்போது நடுங்கும் என்பதால் அவர் அந்த குளிருக்கு தன்னை பழக்கப்படுத்தினார். டெடிக்கேசன் டு த கோர் இஸ் அர்ஜுனா. என்கிறார்.