வெள்ளைக்கார வீட்டு மருமகள் ஆக இங்கிலாந்துக்கு போய்விட்டவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் நடிகை. அந்த நாட்டுக்கே உரித்தான கலாசாரத்தை இம்மி பிசகாமல் பின்பற்றுகிறவர்.ஆடைகள் அணிவதிலும் அந்நாட்டின் பழக்கம்.
தாராள மனசு.! “காட்டிக்காட்டி மறைத்துக்கொள்ளும் சுய நலமில்லை.”என்கிற கவியரசின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
பிரியங்காவின் கணவர் பெயர் நிக் ஜோனஸ் .
பிரியங்கா வாடகைத்தாய் வழியாக பெண் மகவுக்கு அம்மா ஆகியிருக்கிறார்.
பிள்ளைப்பெறும் தகுதி இல்லாமல் போய்விட்டதால் வாடகைத்தாய் வழியாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டியதாகி விட்டதா?
அவரே சொல்லுகிறார்
“எனக்கு மருத்துவரீதியான சிக்கல்கள் இருந்தன.ஆகவே இதுதான் சரியான வழி என நினைத்தேன்.எனது அந்த வாடகைத்தாய் முறையானது அன்பு ,கருணை ,என்றிருந்தது.சற்று வேடிக்கையாகவும் இருந்தது.ஆறு மாதத்தில் கிடைத்த பரிசு.!
இந்த குழந்தை பிறந்தபோது நானும் ஆபரேஷன் அறையில் இருந்தேன்.குறைப்பிரசவம். கைப்பிடியளவுதான் குழந்தை இருந்தது.தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவு நர்ஸ்கள் எப்படியெல்லாம் செயல்பட்டனர் என்பதை பார்த்தேன்.மல்டி மேரி சோப்ரா ஜோனஸ் (குழந்தையின் பெயர்.)கடவுளின் கொடை .”என்றார் பிரியங்கா சோப்ரா .