சினிமா உலகில் கற்புக்கு அப்பால் பல நிகழ்வுகள் இருக்கின்றன.
அவை ஆண் , பெண் பாலருக்கும் பொருந்தும்.
விருப்பமுடனோ அல்லது நிர்பந்தமோ அது இருட்டு அறையில் நடந்தேறும்.
சம்பந்தப்பட்டவர்கள் அதைப்பற்றிய கவலை இல்லாமல் நடந்து கொள்வார்கள்.
சிலர் பகிரங்கமாக சொல்வதுண்டு.
“டைரக்டர் அனுராக் காஷ்யப் என் முன்பாக நிர்வாணமாக நின்றார்” என்கிற நடிகை பாயல் கோஷின் ‘பழைய’குற்றச்சாட்டாக இருந்தது. அதைப்பற்றிய அக்கறை இல்லாமல் இதுவும் கடந்து போகும் என்று இருந்து விட்டது.
இப்போது பாயல் கோஷ் புதிய தகவலை சொல்லியிருக்கிறார்.
ஆந்திர, மும்பை ஊடகங்கள் எழுத்துகளை எரி தணலாக கொட்டிக் ‘கொன்று’ வருகின்றன.
அவர் தனது 11 வது படம் பற்றி சொல்லியிருக்கிறார் .
” நான் எனது 11 வது படத்தை கடந்து இருக்கிறேன்.நான் மட்டும் திரை உலகை சேர்ந்த எவருடனாவது ‘ படுத்து’ இருந்தால் இந்த 11 வது எண்ணிக்கை 30 வது படமாக இருந்திருக்கும்.பெரிய படங்களை அடைய வேண்டும் என்றால் படுத்தால் நடக்கும்”என்கிறார்.
அட ,தேவுடா !