பேஸ்புக்கில் தன் பெயரில் சிலர் போலியாக கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருவதாக நடிகர் சூர்யா இன்று பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் தெரிவிக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்து சூர்யா தரப்பில் இன்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது “சில மணி நேரத்துக்கு முன்புதான் பேஸ்புக்கில் என் பெயரில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.. இது எனது உண்மையான அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கம் என நம்பி உலகெங்கும் உள்ள பலரும் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர். இது போலியான முகநூல் பக்கமாகும். நடிகர் சூர்யாவுக்கும் இந்த முகநூல் பக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யாரோ சிலர் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளனர். இது குறித்து சைபர் க்ரைமில் புகார் தெரிவிக்கவிருக்கிறோம். ட்விட்டர், பேஸ்புக் என எந்த சமூக வலைத் தளத்திலும் சூர்யா இல்லை. அப்படி அவர் இணைந்தால் அது குறித்து முறையாகத் தெரிவிப்போம்,” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.