நடிகர்கள் கமல்,ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி,சியான் விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இன்று காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் மிகவும் ஆர்வம் காட்டி தங்கள் வாக்குகளை பதிவிட்டுள்ளனர் . மேலும், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ராகவா லாரன்ஸ், பிரசாந்த், அருண் விஜய், ஹரிஷ் கல்யாண், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், லிங்குசாமி, தயாரிப்பாளர் செளத்ரி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த், ஆர்யா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பல பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்
இதில் சொல்லி வைத்தாற்போல்,ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சியான் விக்ரம், தனுஷ்,சந்தானம் சிபிராஜ்,ரமயா பாண்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் வெள்ளை சட்டையை அணிந்துக் கொண்டு வந்து ஓட்டுக்களை செலுத்திய காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.இதில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து விட்ட அஜித், திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்தது தனது ஜனநாயக கடமையை ஆற்றிய புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இதில் அஜித் முதல் ஆளாக்க வந்து தனது வாக்கினை பதிவு செய்து அசத்தினார்.
நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமார் உடன் வாக்களித்ததாகவும், நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களுடன் வந்து வாக்களித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்களித்த நிலையில், அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என கூறினார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யும் தனது வாக்கினை செலுத்துவதற்காக தனி விமானம் மூலம் ரஷ்யாவில் இருந்து சென்னை வந்தடைந்தார்.வாக்களிக்க வந்த நடிகர் விஜயின் தலை மற்றும் கையில் சிறுகாயம் ஏற்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பதறிப் போனார்கள். ‘GOAT’ படப்பிடிப்பில் பைக்கில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்துதான் அது என்றும் தெரிய வந்துள்ளது.