ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது . இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.முன்னதாக, ‘ரத்னம்’ படத்திற்கான விநியோக தொகை பாக்கியை தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சையில் படம் வெளியாகும் என அங்குள்ள தியேட்டர் உரிமையாளர் சங்கத்தில் இருந்து எனக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது என்றும், இதுபற்றி பேச முயன்றால் என் அழைப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இப்படி செய்வது கட்டப்பஞ்சாயத்துக்கு சமமானது. எனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்ளுக்கு என்ன கதியாகும் என வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இறுதியாக, கட்டப்பஞ்சாயத்து எந்த பயமோ, வருத்தமோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. அன்பான டி டி ஏரியா தியேட்டர் அசோசியேஷன் நண்பர்களே, செயற்குழு உறுப்பினர்களே, ‘கங்காரு’ நீதிமன்றங்கள் இன்னும் இருக்கிறது என்பதை .உறுதிப்படுத்தி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் என்னைப் போன்ற ஒரு போராளிகளை வீழ்த்த முடியாது.சற்று தாமதமானாலும் நிச்சயம் உங்களை நீதியின் மூலம் வீழ்த்துவேன். அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, அவர்கள் வாழ்வாதாரத்திற்காக இங்கு வந்தவர்கள். திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை என்றும் நான் நம்புகிறேன். மேலும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு நன்றி, நீங்கள் தயாரிப்பாளர்களுக்காக பல சங்கங்கள் வைத்திருப்பது உங்கள் அனைவருக்கும் அவமானம் என்று விஷால் வேதனையை தனது ட்விட்டரில் வெளிப்படுத்தி உள்ளார்.இது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.