தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’ போன்ற படங்களைத் தயாரித்துள்ள நடிகர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார், தற்போது . ‘ பயர் ‘ என பெயரிடப்பட்டுள்ள புதியபடத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ‘பிக் பாஸ் தமிழ்’ பாலாஜி முருகதாஸ் மற்றும் சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் மற்றும் காயத்ரி ஷான் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
இப்படத்தை எழுதி இயக்கியுள்ள ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் கூறுகையில்,”இப்படம் பெண்களின் விழிப்புணர்வு குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளது. இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும்.
தொடர்ந்து தவறான செயல்களில் தெரிந்தே ஈடுபடும் ஆண்கள் இந்த சமுதாயத்தில் சகஜமாக நடமாடும் நிலையில், பெண்கள் தெரியாமல் தவறு செய்தாலும் அவர்களை நமது சமூகம் வேறு மாதிரி பார்க்கிறது. இந்த சமூக பார்வை மாறினால் மட்டுமே நல்ல சமுதாயம் உருவாகும். ஏனென்றால் இவ்வாறு இருப்பது இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் நல்லதல்ல எனும் கருத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டு செல்லும்,” என்கிறார்
இப்படத்தின் வசனத்தை எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். ஒளிப்பதிவை சதீஷ் ஜி கவனிக்க, அறிமுக இசையமைப்பாளர் டி கே இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.












