டி.டி.சினிமா ஸ்டுடியோ பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம்,“சூரியனும் சூரியகாந்தியும்”. இப்படத்தில், காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார்.அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.இப்படத்தின் ஒளிப்பதிவை திருவாரூர் ராஜா கவனிக்க, ஆர்.எஸ்.ரவி பிரியன் இசையமைத்துள்ளார் இப்படத்தின் இணைதயாரிப்பை டெய்லி குருஜி ஏற்றுள்ளார் .
இப்படம் குறித்து இயக்குனர் ஏ.எல்.ராஜா கூறுகையில்,”“சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்” என்ற பாரதியாரின் பாடல் தான் கதையின் மையக் கருத்து. சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூப்போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், இவர்களின் காதலுக்குள் சாதி பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதை தான் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் கதை சொல்கிறது. என்கிறார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது இந்நிகழ்வில் பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட, மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார்.இயக்குனர்கள் பேரரசு, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், உள்பட பலர் கலந்து கொண்டனர்.