2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்ம ஸ்ரீ என மொத்தம் 139 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தொழில் துறையில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, கலைத்துறையில் நடிகர் அஜித்குமார் மற்றும் சோபனா சந்திரசேகருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த தாமுதரன், லட்சுமிபதி ராம சுப்பையர், சீனி விஸ்வநாதன் போன்றோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்பிரிவில் ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நடிகர்களில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் இதற்கு முன்பு பத்ம பூஷண் விருது பெற்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து அஜித்குமார் இந்த முறை பத்ம பூஷண் விருது வென்றுள்ளார். இதனையடுத்து அஜித்துக்கு முதல்வர் ஸ் டாலின் துணைமுதல்வர் உதயநிதி ஸ் டாலின் கனிமொழி எம்பி. பாமக அன்புமணி ராமதாஸ் பாஜக அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












