நடிகர் ரஜினிகாந்த் மூத்தமகள் ஐஸ்வர்யாதனுஷ், உலக மகளீர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஐநா சபையில் ஆடிய பரத நாட்டியம், தற்போது பலத்த கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.
வைரமுத்துவின் அவசர தாலாட்டு உள்ளிட்ட சில பாடல்களுக்கு புதுமையான முறையில் அவர் நாட்டியமாடியிருந்தார்.மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பாராட்டுத் தெரிவித்திருந்தார். ஆனால் இணையதள ரசிகர்கள் அந்த நடனத்தை ஏகத்துக்கும் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னமும், ஐஸ்வர்யாதனுஷ் நடனம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.. ‘ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியமல்ல… பரத நாட்டியம் இன்று எந்த அளவுக்கு பரிதாப நாட்டியமாகிவிட்டது என்பதை அந்த நடனம் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்திலும் அவரை ஏகத்துக்கும் கிண்டல் அடித்துள்ளார். பரத நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற ஐஸ்வர்யா தனுஷ், ஏற்கெனவே பல விழாக்களில் பரத நாட்டியம் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது