தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜயின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜனநாயகன், கடந்த பொங்கலன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் முடங்கியது. மேலும் படக்குழுவின் வழக்கு காரணமாகவே சென்சார் பிரச்சினை முடிவில்லாமல் போவதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர்.வழக்கு இருப்பதாலேயே மறு தணிக்கையிலும் சிக்கல் இருப்பதாக பல்வேறு வல்லுநர்களும் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து ஜனநாயகன் படக்குழு, நீதிமன்றங்களில் இருந்து வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. மறு ஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாலேயே வழக்கை வாபஸ் பெறுவதாக ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் கூறியது. கடந்த மாதமே வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில், அப்போதே படம் சென்சார் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ரிவைசிங் கமிட்டி அமைக்கப்படவே சில வாரங்கள் ஆன நிலையில், மறு தணிக்கைக்கான வேலைகள் எதுவும் நடக்கவில்லை.
இதற்கிடையே ஜனநாயகன் படத்தை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் மறு ஆய்வுக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு பார்க்க உள்ளதாக செய்திகள் வெளியானது,இதையடுத்து இப்படம் இந்த வாரமே வெளியாகும் வாய்ப்பு உருவாக்கி இருந்தது.இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இப்படத்தை பார்வையிட இருந்த ரிவைசிங் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரால் இன்று இப்படத்தை பார்வையிட இயலாத சூழல் உருவானது.இதையடுத்து ‘ஜனநாயகன்’ படத்தை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் மறு ஆய்வுக் குழு பார்வையிட இருந்தது திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மீண்டும் அந்த கமிட்டி எப்போது படத்தை பார்க்கும் என்ற தகவலும் வெளியாகாததால் இப்படம் வெளியீடு என்பது தொடர்ந்து கேள்விகுறியாகவே நீடித்து வருகிறது.இதற்கிடையே விஜய்க்கு சிபிஐ கரூர் சம்பவம் தொடர்பாக நாளை ஆஜராக கூறி சம்மன் அனுப்பியுள்ளது…












