நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் வருகின்ற 19-ம் தேதி வரை, தனது ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடக்கிறது. அப்போது, அவர்களுடன் ரஜினி போட்டோ எடுக்க உள்ளார். இதற்கான துவக்க நிகழ்ச்சியில், இயக்குநர் எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டார்.

ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. இலங்கைப் பயணமும் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஊடகங்கள் ரஜினி முடிவில் உறுதியாக இருக்க மாட்டார் என்று செய்திகள் வந்தன. தண்ணீரில் இறங்கும் போது, முதலைகள் இருக்கின்றன. அப்போது, கால் வைத்தால் என்ன ஆகும்? அதனால், பின் வாங்கிதான் ஆகி வேண்டும். முரட்டு தைரியம் எப்போதும் ஆகாது.அரிசி வெந்தால்தான் சோறு ஆகும். படம் நன்றாக இருந்தால்தான் வெற்றியாகும். எனது இயக்குநர்கள் அதை சரியாக செய்ததால்தான் நான் இங்கு நிற்கிறேன். ரஜினி நல்லப்படம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான், நீங்கள் திரையரங்கு வருகின்றீர்கள். நான் நல்லப்படங்களை, தொடந்து கொடுப்பேன்.
சில காரணங்களினால் , 1996-ல்அரசியலில் சில கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது கோரிக்கையை ஏற்று அந்த கூட்டணியை, ரசிகர்கள் வெற்றி பெற வைத்தனர். அது முதல் எனது பெயர் அரசியலில் அடிபட ஆரம்பித்தது. எனது சில ரசிகர்களும் அரசியல் ஆர்வம் அதிகமாக காணப்படுகின்றனர். அவர்களை, அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். என் பெயரை தவறாக பயன்படுத்த நினைத்தனர். ஆனால், அடுத்தடுத்து ஆதாயத்திற்காக, அணுகும் போது அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது.அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆண்டவன்தான் தீர்மானிக்கிறான். இப்போது, நடிகனாக என்னுடைய கடமையை செய்கிறேன். நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதில் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்.அது கடவுளின் கையில்தான் உள்ளது. என்னைப் பற்றிய அரசியல் செய்திகளை நம்ப வேண்டாம். அப்படி நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக வருவேன். காசு சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் இப்போதே விலகி விடுங்கள். நான் அரசியலுக்கு வந்தால், ஊழல் செய்பவர்கள். பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுபவர்களை பக்கத்துலயே வைத்துக்கொள்ளமாட்டேன். அந்த மாதிரி ஆட்களை கிட்டக் கூட சேர்க்க மாட்டேன். நுழையக் கூட விட மாட்டேன் ஒதுங்கிடுங்க. ரசிகர்கள் முதலில் குடும்பத்தை கவனிக்க வேண்டும். குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள். அடிப்பட்டு சொல்கிறேன். சந்தோஷமாக இருங்கள். இவாறு அவர் பேசினார், முன்னதாக மேடையில் பாபா முத்திரையுடன் தாமரை மலர் சின்னம் இடம் பெற்றுஇருந்தது.