இலக்கியத்துக்கான உயரிய விருது ‘ஞானபீடம்’
அரியதும் ,உயரியதுமானது என்பதே உண்மையாகும்.
இலக்கியவாதிகள் ,படைப்பாளிகள் என விரிந்து பரந்து இருந்தாலும் அவர்களில் சிறந்த கருத்துகளை படைத்தவர்கள் ,பண்பானவர்கள் என அலசி தேர்வு செய்கிறபோது கிடைப்பவர்கள் சிலரே,!
அந்த சிலரிலும் உயரிய விருது மொழியின் வழியாக அவர்களுக்கு கிடைத்தாக வேண்டும்.
இருபத்து ஐந்து ஆண்டுகளை கடந்து ஞானபீட விருது கவிப்பேரரசுக்கு கிடைத்திருக்கிறது.
1975 -ம் ஆண்டு எழுத்தாளர் அகிலன் அவர்களும் ,2002 -ல் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் இந்த ஞானபீட விருதுகளை பெற்றார்கள்.
25 ஆண்டுகளை கடந்து 2026-ல் வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது ‘ஞானபீடம். ‘
கவிப்பேரரசு அமரவேண்டிய பீடம்தான் அது.
பேரரசர்கள் வந்து போவார்கள்.ஆனால் பேரரசு மட்டும் அதன் எல்லைகளை விரிவு படுத்திக்கொண்டே பயணிக்கும். அன்னைத்தமிழின் அருமைப் புதல்வரான கவிப்பேரரசும் தனது எல்லைகளை கண்டு பயணிக்கிறார்.
“தாவணி விசிறிகள்…எங்கேர்ந்து வார்த்தைகளை பிடிக்கிறீர்கள். ”வானம் எனக்கொரு போதி மரம் ,நாளும் எனக்கது சேதி தரும்.”என்கிற வரிகளில் விழுந்து விட்டேன் “என்று உலகநாயகன் கமல்ஹாசன் எம்.பி. இன்றும் வியக்கிறார்.
எத்தனையோ படைப்புகள் .அத்தனையும் தமிழின் ,தமிழனின் சிறப்புகளை சொல்லியவை.
கருவாச்சி காவியம் போன்று கரிசல் மண்ணின் வாழ்வியலை உயிர்ப்புடன் சொன்னவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து.
அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது ‘சினிமா முரசம்.’
வித்தகர்களுக்கு சிகரங்கள் விரைவாகவே வசப்பட்டுவிடும்.
வைரமுத்துவின் எழுத்துகளை கிரீடங்களாக அணிந்து கொள்ள அவைகள் காத்துக்கொண்டிருக்கின்றன.
வாழ்க கவிப்பேரரசு !
ஏழைக் குசேலனின் வாழ்த்து இது.
–தேவிமணி.












